Saturday, May 18, 2019

கண் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட









1. கண்வலி: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட கண் வலி சரியாகும்.

2. கண்பார்வை தெளிவு பெற:
பொண்ணாங்கண்ணி கீரை 60 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

3. கண் சூடு: நெல்லிக்காய் சாறு பிழிந்து ஒவ்வொரு ஸ்பூன் இரு வேளை கொடுக்க குணமாகும்.

4. கண் எரிச்சல்: அரைக்கீரை சாப்பிட்டு வர கண் எரிச்சல் தீரும்.


5.கண் குளிர்ச்சி பெற: தாமரை இதழ்களை காய்ச்சி தேன் கலந்து சாப்பிட்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும்.

6. கிட்டப்பார்வை தூரப்பார்வை நீங்க:
நல்லெண்ணெய் வெங்காயச்சாறு புளிய இலைச்சாறு கலந்து கண்ணில் கட்டி 10 நிமிடம் கழித்து குளித்து வர குறைகள் நீங்கும்.

7. கண்ணில் நீர் வடிதல் நிற்க: நாவற்பழத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர குணமாகும்.

8. கண் சிவப்பு மாற: புளிய இலை கொழுந்தை இரு கண்களின் மேல் வைத்து கட்டி ஒரு மணி நேரம் கழித்து எடுத்தால் குணமாகும்.

9. மாலைக்கண் நோயை தடுக்க: பப்பாளி பழம் சாப்பிட்டு வர குணமாகும்.

10. கண் ஒளி பெற: சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து கொள்ள கண்கள் ஒளி பெறும்.





No comments:

Post a Comment

வாய் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்து விடுபட

1. வாய்ப்புண் குணமாக : தேங்காய் பாலுடன் தேன் கலந்து பருகுவதன் மூலம் வாய்ப்புண் குணமாகும். 2. உதடு வெடிப்பு குணமாக:  கரும்பு த...